Tuesday, 12 June 2018

டுவிட்டர் டிரெண்டிங்கில் ராகுல்

புதுடில்லி

கோகோ கோலா நிறுவனத்தின் நிறுவனர் குறித்த காங்., தலைவர் ராகுல் பேசிய பேச்சு டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

டில்லியில் ஓ.பி.சி., பிரிவினரிடையே காங்., தலைவர் ராகுல் இன்று உரையாற்றினார். அவர் தனது உரையில், கோகோ கோலா நிறுவனத்தின் நிறுவனர் குறித்து பேசியதாவது: கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியவர் முதலில் எலுமிச்சை சாறு விற்றவர். நீரில் சர்க்கரை கலக்கிய அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது. இதன் மூலம் கிடைத்த பணத்தில் அந்நிறுவனம் துவங்கப்பட்டது, என பேசினார்.

கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் நிறுவிய நிலையில், ராகுலின் இப்பேச்சு, #AccordingToRahulGandhi என டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

No comments:

Post a Comment