ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தவிர, ஜப்பான் மக்கள் ரஜினிகாந்தின் ரசிகர்கள் என்றே சொல்லாம். ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரஜினிகாந்த் படத்திற்கு சற்றே செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
வழக்கம் போல் ‘காலா’ படமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படம் ரிலீசாவதற்கு முன் தூத்துக்குடி சம்பவம் குறித்து ‘வாய்ஸ்’ கொடுத்தார் ரஜினி. ஸ்டெர்லைட் கலவரத்திற்கு சமூகவிரோதிகளே காரணம் என சொன்னதோடு போலீசாரை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசியல் கட்சிகள் ரஜினியின் இந்த ‘வாய்’சிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே ‘காலா’ படம் ரிலீசானது. பொதுவாக ரஜினி படம் என்றாலே காதல், காமெடி, சென்டிமென்ட் என இருக்கும். ஆனால், ‘காலா’ படம் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருந்தது. காமெடி, காதல், டூயட் போன்ற எதுவுமே இல்லாமல் அரசியல்வாதிகளின் அடவாடியை எதிர்த்து ரஜினி பல இன்னல்களை சந்தித்து கடைசியில் வெற்றி பெறுகிறார். இதுதான் கதை. இந்த படத்தின் கதையை குறை சொல்ல முடியாது. ஆனால், பரதேசி சாரி பா.ரஞ்சித் படமாக்கிய விதம்தான் இந்த படத்தை படுதோல்வி அடையச் செய்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பொதுலவாதிகள் என கூறிக் கொண்டு எதாவது ஒரு பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு சிலர் போராடி வருகின்றனர். ஜல்லிகட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டம் சிறப்பாக நடந்த நிலையில், திடீரென அந்த போராட்டத்தில் சமூகவிரோதிகள் தங்களை இணைத்துக் கொள்ள கடைசியில் போராட்டம் கலவரமாக மாறியது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு பிரச்னையை கையில் எடுத்து ‘பிண’ அரசியல் நடத்தினர். இதுவும் தோல்வி அடைந்த நிலையில், ‘ஸ்டைர்லைட்’ பக்கம் சென்றனர். இங்கு தூத்துக்குடி மக்கள் 99 நாட்கள் அமைதியாக போராட்டம் நடத்திய நிலையில், 100வது நாளில் தலைவர்கள் எல்லோரும் வீட்டில் பதுங்கிக் கொள்ள இவர்களால் அனுப்பப்பட்ட சமூகவிரோதிகள் போலீஸ் மற்றும் அவர்களைது வாகணங்களை அடித்து நொறுக்கினர்.
பின் வேறுவழியில்லாமல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்த சிலர் பலியாகினர். தமிழகத்தில் தொடர்ச்சியாக கலவரம் நடக்கிறது. இதற்கு யார் காரணம் என மத்திய, மாநில, அரசுகளின் உளவுத்துறை விசாரணை மேற்கொண்டது. இதில், போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் ஒரே ஆட்கள்தான். இவர்கள்தான் எல்லா போராட்டத்தையும் கலவரமாக மாற்றுகிறார்கள் எனற உண்மை தெரியவந்தது. இதையடுத்து உஷாரான எடப்பாடி அரசு கலவரத்திற்கு ஆதராக உள்ளவர்களை அதிரடியாக கைது செய்து வருகிறது. இம்முறை சேலம் எட்டுவழிச் சாலையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என சமூகவிரோதிகள் முயற்சித்து வரும் நிலையில், எட்டுவழிச் சாலை வந்தே தீரும் என அறிவித்த எடப்பாடி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.
மத்திய அரசின் நீட் தேர்வால் ‘கல்வி மாபியாக்கள்’ நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. தவிர ‘பணஇழப்பு’ நடவடிக்கை பலகட்சிகளுக்கு, கள்ளப்பணம் வைத்திருந்தவர்களுக்கு சவுக்கடியாக அமைந்தது,. தவிர, கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து அதிக பணம் கிடைத்து வந்தது. இதை வைத்துக் கொண்டு சில அமைப்புகள் மதம் மாற்றம், சமூகவிரோதிகளுக்கு பண உதவி செய்து வந்தனர். இதையும் மத்திய அரசு தடுத்துவிட்டது. இதனால்,கோபமடைந்தவர்கள் மத்திய அரசை எதிர்த்து குறிப்பாக மோடியை எதிர்த்து தினம் ஒரு போராட்டம் என அறிவித்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாதது இவர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மறைவு, கருணாநிதியால் செயல்படாத நிலையில், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இன்னும் நீடிக்கிறது. இந்த நிலையில், அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி, எனது அரசியல் ‘ஆன்மீகம் சார்ந்த அரசியலாக’ இருக்கும் என்றார். வழக்கம் போல் இதற்கும் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு வந்தாலும் மக்கள் ரஜினிகாந்திற்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக, எம்.ஜி.ஆருக்குப் பின் பெண்கள் ஆதரவு ரஜினிகாந்திற்கு இருப்பது தெளிவாக தெரிகிறது. மத்திய உளவுத்துறை எடுத்த ‘சர்வே’யில் ரஜினி க்கு பெண்கள் ஆதரவு அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால்தான் ரஜினி குறித்து எல்லா கட்சிகளும் ஒருவித பயத்தில் உள்ளன.
காலா படத்திற்கு கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சில கிறிஸ்துவ அமைப்புகள் கிறிஸ்துவர்கள் யாரும் ‘காலா’ படத்தை பார்க்க கூடாது என வெளிப்படையாக அறிவித்தன. இப்படிப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இந்துக்கள் நினைத்து படத்தை பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ‘காலா’ படத்தில் இந்து கடவுள்களை விமர்சித்து, மோடி மற்றும் அவரது திட்டங்களை நக்கல் செய்து படம் எடுத்திருந்தது தெரியவந்தது. எனது அரசியல் ஆன்மீக அரசியல் என சொன்னதால் படம் பார்க்க சென்ற பலருக்கு ரஜினியும் தங்களை ஏமாற்றிவிட்டாரே என்ற வருத்தத்துடனான கோபம் இருந்தது.
பொதுவாக எதிரிகள் நம்மை விமர்சிப்பதில் தவறு இல்லை. ஆனால், ரஜியின் ‘காலா’ படம் அவரை துரோகியாக பார்க்க வைத்துவிட்டதே என இந்துக்கள் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் கோபமடைந்தனர். பொதுவாக ரஜினி படம் என்றால் ஒவ்வொரு ரசிகரும் 3 முறைக்கு மேல் பார்ப்பார்கள். ஆனால், ‘காலா’ படத்தை மானமுள்ள இந்துக்கள், ரசிகர்கள் ஓருமுறை பார்த்துவிட்டு டைரக்டரை வசைப்பாடி சென்றது கண்கூடாக பார்க்க முடிந்தது. படத்தை பார்க்க வந்த பெண்களும் இது ரஜினி படம் இல்லை என்றே கூறினர்.
‘காலா’ போன்ற பெரிய படத் தோல்வியிலிருந்து இனி டைரக்டர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனியும் இந்துக்களையோ, அவர்கள் வழிபடும் கடவுள்கள் மற்றும் கலாச்சாரத்தை கேவலப்படுத்தி படம் எடுத்தால் ‘காலா’ நிலைமைதான் உங்களுக்கும் என இந்துக்கள் சொல்லாமல் சொல்லி விட்டனர். இந்த நேரத்தில் மானமுள்ள இந்துக்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள். இதைப் பார்த்தாவது இந்து நடுநிலை நக்கிகள் திருந்தினால் நல்லது.
படத்தை படமாக பார்க்க வேண்டும் என திரைப்படத் துறையைச் சேர்ந்த பலர் கூவி வருகின்றனர். உண்மைதான் படத்தை நாங்கள் படமாக பார்க்க தயாராகவே இருக்கிறோம். ஆனால், எங்கள் மதத்தை, கடவுளை கேலி செய்து படம் எடுத்தால், அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க நாங்கள் ஒன்றும் கூமுடைக்கள் இல்லை. இந்து என்ற உணர்வு எங்களிடம் சற்று அதிகமாகவே இருக்கிறது.
‘காலா’ படம் தோல்வி என அப்படத்தை தயாரித்த தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எங்கள் கடவுள் ‘ராமரை’ யார் விமர்சித்தாலும் அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், ‘காலா’ படத்தை தோல்வி அடையச் செய்த மானமுள்ள இந்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment