Wednesday, 20 June 2018

தி.மு.க.,வின் அரசியல் நேர்மை பற்றிய பதிவு



பிரெண்ட்ஸ்...

இன்று காலை சுஜாதா ராம் அவர்களின் ஒரு பதிவை பார்த்தேன். பார்த்தவுடன் ‘குபீர்’ என சிரிப்பு வந்துவிட்டது. அதில், ஸ்டாலின் குறித்து ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்.  அதாவது ‘அரசியலில் நேர்மையாக இருந்ததால் தி.மு.க.,வை யாருக்கும் பிடிக்கவில்லை’ என ஸ்டாலின் கூறியதாக சொல்லி இருந்தார். சமீபகாலமாக ‘நமக்கு நாமே’ புகழ் ‘சட்டை கிழித்தான்’ மிஸ்டர் சுடாலினின் காமெடிக்கு ஓரு அளவே இல்லாமல் போய்விட்டது. பழமொழி சொல்வதிலிருந்து, சுதந்திர தினம், குடியரசு தினம் தேதி பற்றிய பேச்சுக்கள் உட்பட அனைத்தும் பிதற்றலாகவே இருக்கிறது.

சுஜாதாராமின் இந்த பதிவிற்கு நான் பதில் சொல்லி இருந்தேன். அதாவது தி.மு.க.,வின் நேர்மையைப் பற்றி நான் ஒரு பதிவை பதிவு செய்தால் மக்கள் உங்களை காரி துப்புவார்கள் என சொன்னேன். பலர் எனது இன்பாக்சில் தி.மு.க., நேர்மை குறித்து பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். தொடர்ந்து அரசியல் பதிவை செய்து போரடித்த  நிலையில் என்னாலும் மற்றவர்களைப் போல் நகைச்சுவையாக பதிவு செய்ய முடியுமா என பர்த்தேன். இதோ எனது பதிவு.

எடப்பாடி அரசு கடந்த சில தினங்களாக சமூகவிரோதிகளை அதிரடியாக கைது செய்து வருகிறது. பலர் கைதுக்கு பயந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிங்களுக்கு தப்பி  ஓடிவிட்டனர். சிலர் கைதுக்கு பயந்து முன் ஜாமீன், பின் ஜாமீன், சைடு ஜாமீன் எல்லாமம் எடுத்து வருகிறார்கள். ஆரோக்கிய மேரி எனும் வெளிநாட்டு கைக்கூலி கூட  தைரியமாக கைதானார். ஆனால், ‘மண்டியிடாத மானம் கெட்டவரர்கள்’ கைதுக்கு பயந்து தனது கூமுட்டை சகாக்களை சிறுதுகாலம் எதுவும் பேசாமல், போராடாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிப்பிலிருந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு விலகிய போது அனைவரும் வருத்தப்பட்டோம். இனி இப்படி ஒரு நகைச்சுவை நடிகர் வருவாரா என்று. கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். வடிவேலை விட இரண்டு சிறந்த நகைச்சுவை மன்னர்களை நமக்கு கொடுத்துள்ளார். முதல் நபர் பப்பு என்கின்ற ராகுல், 2வது நபர் ஸ்டாலின் என்கின்ற சுடாலின். இந்த இருவரில் பப்புவை சுடாலின் முந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் சுடாலினின் அறிக்கையை படித்தால் மன அழுத்தத்தில்  இருப்பவர்களுக்கு அது நல்ல ‘டானிக்’காக இருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருகிறேன். தி.மு.க.வின் அரசியல் நேர்மை பற்றி இங்கு சற்றே பதிவு செய்கிறேன். உங்கள் கருத்தை சொல்லவும்.

1. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரை சந்திக்க இல்ஙகை அதிபர் பண்டாரநாயகே வந்தார். அன்றைய தினம் நாளிதழ்களில் இந்திரா, பண்டாரநாயகா இருவரும்  தனிமையில் ஒருமணி நேரம் பேசியதாக செய்தி வந்தது.

இதுகுறித்து தி.மு.க.,வின் நேர்மை தலைவர் கருணாநிதி கூறுகையில், இந்திராவோ கணவணை இழந்தவர், பண்டாரநாயகவோ மனைவியை இழந்தவர். இப்படியிருக்கு  இவருவரும் தனிமையில் என்ன செய்திருப்பார்கள் என்றார்.

2. முதல்வராக அண்ணாதுரை இருந்த போது சட்டசபையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதல் அளித்த அண்ணாதுரை ‘நாடாவை அவிழ்த்து பாவாடை தூக்கினால் உள் இருப்பது தெரியவரும்’ என்றார். இதைக் கேட்ட அந்த பெண் எம்.எல்.ஏ., அழுதே விட்டார்.

3. இந்திரா காந்தியிடம் ஒரு மிகப் பெரிய தொகையை பெற்றுக் கொண்டு கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார் கருணாநிதி.

4. மதுரையில் இந்திரா காந்தியை திமுகவினர் கல்வீசி, செருப்பு வீசி தாக்கிய போது அதை சரி என்று பேசியவர் கருணா நிதி. இந்திராகாந்தி நெட்ரியில் வந்த இரத்தத்தை  இது இரத்தமா அல்லது …… என்றார்.

5. பின் அதே இந்திராகாந்தியை வரவேற்று ‘நேரு மகளே வா... நிலையான ஆட்சியைத்தா’ என அந்தர் பல்டி அடித்தார் கருணாநதி.

6. இலங்கையில் ஈழத்தமிழ்ரகளை இலங்கை ராணுவம் சோனியாவுடன் இணைந்து கொத்துக் கொத்தாக கொன்ற போது பதவி விலகாமல் இருந்தது. தவிர இதற்காக மெரினா பீச்சில் ஏர்கூலருடன் இணை, துணையுடன் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியின் நேர்மை.

7. பண்டாரம், பரதேசி என பேசிவிட்டு பின்னர் பா.ஜ.,வுடன் மத்திய அரசியில் இணைந்து பதிவியை அனுபவித்தது.

8. முரசொலி மாறன் இறந்த போது அவரது உடலை பார்க்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வந்தார். பின்னர் அவர் சென்னை ஏர்போர்ட் கூட செல்லாத நிலையில்,       காங்கிரசுடன் கூட்டு என அறிவித்த கருணாநிதியின் நேர்மை...

9. மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு போன்றவைகளுக்கு அனுமதி  கொடுக்கப்பட்டது. ஸ்டெர்லெட் ஆலைக்காக 260 ஏக்கர் நிலம் அளித்தது இதற்காக அவர்களிடம் மிகப பெரிய தொகையை லஞ்சமாக பெற்ற நேர்மை.

10. ஆட்சி போனவுடன் இந்த எல்லா திட்டங்களையும் எதிர்த்து போராடுவது, சட்டசபையில் சட்டைய கிழித்துக் கொள்வது. நமக்கு நாமே நாமம் போட்டுக் கொள்வது.

11. சட்டசபையில் பெண் என்றும் பாராமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலையை அவிழ்த்தது... அவரது குடும்பத்தை கேவலமாக விமர்சித்தது...

இப்படியாக அரசியலில் நேர்மையாக இருந்த, இருக்கின்ற தி.மு.க.,வைப் பார்த்து யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். நீ பேசு சுடலை...

ஆனா ஓன்று மக்களே... சுடாலின் பேச்சை ரசிக்கனுமே தவிர தீவிரமாக ஆராயக்கூடாது... அது நமக்கு நாமே சிரிப்பை அடக்கமுடியாமல் போய்விடும்.


No comments:

Post a Comment