Wednesday, 19 September 2018

பாவம் ஜெகதீசன்...!

சொறியார் சாரி பெரியார் சிலை மீது செருப்பை வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

*** தமிழக பா.ஜ.,வை நம்பி இப்படி செய்தால் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை தொண்டர்களுக்கு இது மிகத் தெளிவாக தெரியப்படுத்திவிட்டது.

இதே நிலை கட்சி தலைவர்களுக்கு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வைத்துவிடுவார்கள். ஆனால், தொண்டர்களுக்கு என்றால்  ‘செய்தது தவறு’ என உத்தமர்கள் போல் பேசி அவர்களை கண்டு கொள்ளாமல விட்டு விடுவார்கள். தேவைப்பட்டால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக  அறிவிப்பார்கள். ஜெகதீசன் போன்றவர்களுக்கு இது ஒருபாடம். கட்சியை நம்பி சிறைக்குப் போய் குடும்பத்தை நடுத் தெருவில் கொண்டு வந்து விடவேண்டாம்.

எந்த ஓரு கட்சியிலும் தலைவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். தொண்டர்கள்தான் உணர்ச்சிவசப்பட்டு செய்துவிட்டு தவிக்கிறார்கள். திராவிட பாதையில்தான் தமிழக       பா.ஜ.,வும் தனது பயணத்தை தொடர்கிறது. பாவம் ஜெகதீசன்.

ஜெகதீசனுக்கு எல்லாவித சட்ட உதவிகளையும் செய்து தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. அர்ஜூன் சம்பத் அவர்கள் கூறியிருப்பது சற்று ஆறுதலை தருகிறது.

இதற்குத்தான் முகநூலில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கட்சி உறுப்பினராவதில்லை. முகநூலில் இருப்பவர்கள் கட்சி குறித்து தெளிவாக இருக்கிறார்கள். பாவம்,  உண்மை தொண்டர்கள் கட்சியை நம்பி ஏமாற்ந்து போகிறார்கள்.  

பிள்ளையார் சிலையை உடைத்த போது பொங்காதவர்கள் ஜெகதீசன் விஷயத்தில் நல்லவர்கள் போல் நடிப்பது காலக்கொடுமை. கட்சி தலைவரே பெரியாரை தந்தை    பெரியார் என்கிறார். என்னத்த சொல்ல. இவர் தந்ததை என்றால் ஜெகதீசன் எங்களுக்கு கடவுள். ஓருவர் ஜெகதீசன் பின்புலத்தை ஆராய வேண்டும் என்கிறார். ஆராய்ந்து ‘ஆஸ்கார்’ விருது தருவார் போல.

பிள்ளையார் சிலையை உடைத்த உத்தமர்களுக்கு  கட்சி சார்பில் இரண்டு நாள் ‘கொடைக்கானல் டூர்’ ஏற்பாடு செய்யலாம். காலக் கொடுமை.

இனியும் யாராவது என்னிடத்தில் தமிழக தலைமக்கு முட்டுக் கொடுத்தால் அவர்களை பிளாக் செய்து விடுவேன்.

No comments:

Post a Comment